உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமோ கட்சியிலிருந்து மஹாத்தீர் மொஹமட் விலகினார்

அக்கட்சி ஊழலுக்கு துணைபோகிறது எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே தான் அம்னோவிலிருந்து பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதிமோசடிகளில் சிக்கியுள்ள பிரதமர் நஜீப் ரசாக்கின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் கட்சியுடன் தான் தொடர்புபட்டிருக்க முடியாது என டாக்டர் மஹாத்தீர் கூறியுள்ளார்.

நஜீப் அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு சுமார் 700 மில்லியன் டாலர்கள் நிதி வந்தது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த ஊழல் தடுப்பு அதிகாரிகள், அக்குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தனர்.

பெரும் தொகையான அந்தப் பணம், சவுதி அரச குடும்பத்திலிருந்து கிடைத்த நன்கொடை எனக் கூறி அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டனர்.

Related posts

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

wpengine

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

Editor

கல்கமுவ ஆற்றில் நீராட சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Maash