பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக மாகல்கந்தே சுதந்த தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு மாகல்கந்தே சுதந்த தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை மாநகர வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஹக்கீம் (படம்)

wpengine

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாள்

wpengine

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கம்.

Maash