பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகள்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரியவருகிறது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு சற்று முன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,
அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ன.

அமைச்சரின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியை வன்மையாக கண்டிப்பதோடு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் விசாரணைக்கு அமைச்சர் அழைக்கப்படவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Related posts

அம்பாரை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது தாக்குதல்! வாய்மூடிய நல்லாட்சி அரசு

wpengine

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு .

Maash

பண்டிகை காலத்தை முன்னிட்டு 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் 2500 ரூபாய்க்கு.

Maash