பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் பாதை வேலைக்காக 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

(ஊடகப்பிரிவு)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், மற்றும் உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன், அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து மகம்மது, செல்லத்தம்பு, பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பெட்டிப் பாம்பு அரசியல் நடத்தும் அலியும் தாவூத்தும் அறிக்கைகள் மூலம் வெளிப்பாடு!!!!

wpengine

இலங்கையர் 12 பேர் காயம்! சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

wpengine

தலைமன்னாரில் கஞ்சாப்பொதிகளுடன் ஒருவரை கைது

wpengine