பிரதான செய்திகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரியவருகிறது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு சற்று முன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ன.

அமைச்சரின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியை வன்மையாக கண்டிப்பதோடு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் விசாரணைக்கு அமைச்சர் அழைக்கப்படவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா வெடுக்குநாறி ஆலய விவகாரம்; வழக்கு விசாரணை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்திவைப்பு!

Editor

19 வயது யுவதியுடன் தொடர்பு வைத்த 55 வயது குடும்பஸ்தர் – ஊர்மக்களில் தாக்குதலால் உயிரிழப்பு!

Editor

கருணாவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்! 5% பிரயோசனமும் இருக்கவில்லை

wpengine