பிரதான செய்திகள்

அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய அதிகாரிகளின் பட்டியலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவும் உள்ளடங்குகின்றார், என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னால் அமைச்சர் தலைமையிலான கட்சி அழகப்பெருமவுக்கு ஆதரவு

wpengine

அதிபர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை வழங்கிய கல்வி அமைச்சு

wpengine

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

wpengine