பிரதான செய்திகள்

அமைச்சர் டெனீஸ்வரன் நீக்கம்

கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த முடிவை இன்று இரவு 10.30 மணி அளவில் எடுத்துள்ளது.

கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கட்சியின் கருத்தை அறியாமல் வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்

wpengine

மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலேயே அபிவிருத்தியின் திருப்தி தங்கியுள்ளது.

wpengine

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்கும் ரணில்!

Editor