பிரதான செய்திகள்

அமைச்சர் இலஞ்சம்! ஜனாதிபதி ரணில் குழு நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசாரணை ஒன்றிற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பக்கச்சார்ப்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையிலான இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம் விக்கிரமசிங்க, ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு அதிகாரியான எஸ்.எம்.ஜீ.கே பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Related posts

அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் – மோடி தீடிர் விளக்கம் (விடியோ)

wpengine

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வர காரணம் தாஜூடீன் கொலை பற்றி பேசியதால்

wpengine

தனிப்பட்ட அபிலாஷைகளை மறந்து சமூகத்தின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது அமைச்சர் றிஷாட்

wpengine