பிரதான செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம் அவர்களுக்கு இலங்கை உலமா கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தங்களின் வெற்றி பெற்றி உலகமே சந்தேகம் கொண்டிருந்த நிலையில் தங்களின் வெற்றியானது அமெரிக்க மக்களின் சுதுந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான வெற்றியாகவே பார்க்கிறோம். இந்த வகையில் இலங்கை மக்களின் சார்பிலும் இலங்கை முஸ்லிம்கள் சார்பிலும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே வேளை தங்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் நாடுகளுடனும் உலகளாவிய முஸ்லிம்களுடனும் மிகப்பெரிய புரிந்துணர்வும் நட்பும் ஏற்படுவதற்கான சிறந்த நடவடிக்கைகளை மேற் கொள்வீர்கள் என இலங்கை முஸ்லிம் உலமா கட்சி நம்புகிறது. அன்பு மற்றும் பரிந்துணர்வின் மூலமே உலகில் நிம்மதியையும், சாந்தியையும் கட்டி எழுப்ப முடியும் என்ற எமது நம்பிக்கை நிறைவேறும் என எதிர் பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக் பதிவேற்றம் இருவர் கைது

wpengine

இந்தியாவில் தலைமறைவாக இருந்த ,குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Maash

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

wpengine