நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று சனிக்கிழமை (14) மாலை 04.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலி, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.