செய்திகள்பிரதான செய்திகள்

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்!!!! – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு அடிப்படையில்

wpengine

மூத்த போராளி இப்றா லெப்பையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்

wpengine

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்- பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு

wpengine