பிரதான செய்திகள்

அனுராதபுரத்தில் பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி பலி .! CCTV வீடியோ உள்ளே

அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள அரச உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்த எப்பாவல பகுதியை சேர்ந்த சந்தரேகா சுபோதனி ஹேமந்தா (வயது – 20) என்ற யுவதியே உயிரிழந்தார்.

கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் உயிரிழந்ததாகவும், தந்தை படுகாயமடைந்ததாகவும் அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையுடன் பாடநெறியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 35 வயதுடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோவை பார்வையிட :

https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/988591930031855https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/988591930031855

Related posts

மோசமான ஆட்சி! ரணில், மைத்திரி, சந்திரிக்கா ஆட்சியில் பயணித்தால் என்ன நடக்கும்?

wpengine

அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு பின்னால் அலைமோதுவதும் சாதாரண மனித இயல்பாகும்.

wpengine

மன்னாரில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய மக்கள் .

Maash