பிரதான செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி உருவாக்கம்

அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலமையை மேலும் முகாமை செய்வதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப்படி இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

சேதமடைந்த வீடுகள், தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், சுகாதார பிரச்சினைகள், ஆபத்தான இடங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றல் போன்றவற்றை திட்டமிடுவது இந்த செயலணியின் நோக்கமாகும்.

Related posts

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா பிரதி உயர்ஸ்தானிகர் கோரிக்கை!

Editor

கத்தாரில் விழிப்புணர்வு மாநாடு

wpengine

ஒன்றிணைத்த நாட்டை  பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி மஹிந்த

wpengine