பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை மக்களின் காணியினை பெற்றுக்கொடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

அம்பாறை – அட்டாளைச்சேனை, அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் குறித்த செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடை நிறுத்தியுள்ளார்.

எதிர்வரும் இரு வாரங்களில் குறித்த பகுதிக்கு தாம் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த காணியானது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருகிறது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரிஷாட்!

wpengine

பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி வெளியீடு!

Editor

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine