பிரதான செய்திகள்

அசுத்தமான நீரை குடிநீராக மாற்றும் நிகழ்வு! நிராகரிக்கப்பட்ட ஹக்கீம்

அசுத்தமான தண்ணீரை சுத்திகரித்து குடி நீராக மாற்றும் நவீன உதிரிப்பாகங்களை கொண்ட புதிய தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

எப்படியான அசுத்த நிலையில் இருக்கும் தண்ணீரையும் சில வினாடிகளில் குடிநீராக மாற்றும் வகையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவில் இருந்து இந்த இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஜனாதிபதி பார்வையீட்டார்.

 

இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஆன மகிந்த அமரவீர, ரவி கருணாநாயக்க, றிஸாட்  பதியூதீன், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related posts

கஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்

wpengine

இலங்கையின் பொருளாதாரத்துறையில் புதிய திருப்பம் – இலங்கை – ஈரான் வர்த்தக கூட்டமைப்பில் ரிசாட் தெரிவிப்பு

wpengine

ஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

wpengine