பிரதான செய்திகள்

ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் வேண்டுகோலுக்கு ஏற்ப சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம்.

(Ashraff. A. Samad)

சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் அரசகரும மொழிகள் ஆய்வுகூடத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் இதற்கான வேண்டுகோள் கடித்தை அமைச்சரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் பிரதி தலைவர் சியாம் ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

மன்னார் மாவட்ட கல்வி அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட முசலிப்பிரதேசம்.

wpengine

யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்கு 134 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

மன்னார், பேசாலை கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலுக்கு தீ

wpengine