பிரதான செய்திகள்

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு! மன்னார் நோயாளிகள் பாதிப்பு

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான 3 நாள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, தலைமன்னார், பேசாலை, முருங்கன் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

களுகங்கையில் உப்பு நீர் கலப்பதை தடுக்க திட்டம் ; ஹக்கீம் நிதி ஒதுக்கீடு

wpengine

பிரேமஜயந்தவுக்கு எதிராக கட்சி, ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

புத்தரை அசிங்கப்படுத்தி விட்டு! முஸ்லிம்களுடன் வம்புக்கு வந்தார்கள் வியாபாரிகள் கவனம்

wpengine