செய்திகள்பிரதான செய்திகள்

வைத்தியர்களுக்கான வேதன உயர்வு மற்றும் சலுகைகள்.

எதிர்காலத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த சம்பள அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி (Paye Tax) செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தமது கொடுப்பனவுகளை துண்டித்ததால் மார்ச் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து இன்று சில விடயங்களை முன்வைக்கவுள்ளேன்.

வரலாற்றில் முதற் தடவையாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எமது அரசாங்கம் சம்பள அதிகரிப்பை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளது.

இதற்கு முன்னர் சிறியதொரு கொடுப்பனவே வழங்கப்பட்டதுடன் தறபோது அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.” என தெரிவித்தார்.

Related posts

இரத்தினபுரி மக்களுக்கு 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட்

wpengine

உண்மைகள் தெரியும், உண்மைகள் ஒரு போதும் அழிந்ததும் இல்லை, தோற்றதும் இல்லை பாராளுமன்றத்தில் றிஷாட்

wpengine

கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!

Editor