பிரதான செய்திகள்

‘வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் ” : சம்பந்தனின் கருத்துக்கு சுரேஷ் பதில்

தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் அதற்கு எவ்வாறான வழிவகைகள் உண்டு என்பது தொடர்பாகவுமே நான் கூறிவருகிறேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் போன்ற கதையாகிவிட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனை குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயல்கிறார் என்கின்ற அடிப்படையில் அவர் தொடர்பான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இக்கருத்துத் தொடர்பாக சுரேஷ்பிரேமச்சந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வில்பத்து போராட்டத்தை மலினப்படுத்த முயற்சி

wpengine

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா-

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! மார்ச் மாதம் 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

wpengine