பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் போதைவஷ்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

(அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து காணப்படும் போதைவஷ்து பாவனையை கட்டுப்படுத்தக் கோறி வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை மக்கள் நேற்று (19.08.2016) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர்.

பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் கே.பதுர்தீன் தலைமையில் இடம் பெற்ற இவ் அமைதி ஊர்வலம் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இருந்து ஆரம்பமாகி பன்சல வீதி, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியூடாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது.unnamed (3)

அமைதி ஊர்வலத்தின் இறுதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குறைவடைந்து காணப்பட்ட போதைவஸ்து பாவனை தற்போது அதிகரித்து காணப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸில் தனிப்பிரிவென்றை அமைக்குமாரும் கோறி வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர விதாககேயிடம் பள்ளிவாயல் தலைவர் கே.பதுர்தீன் மகஜர் ஒன்றினை கையளித்தார் இதில் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.unnamed (1)

unnamed (4)

Related posts

அதிகாரப் பகிர்வை அர்த்தமுடையதாக்க தமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணையத் தயார் -அமைச்சர் ஹக்கீம்

wpengine

மாற்றுவலுவுடையோருக்காக உள்ளூர் மோட்டார் வாகனங்களுக்கான பதிவு, மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்.

Maash

15,000 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்க முடியாத சூழ்நிலை..!

Maash