பிரதான செய்திகள்

வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது

மக்கள் சுதந்திரமாக தமது வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய  தினம் பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு உரிமையாக இருந்தாலும், தேர்தல் காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதுவித பிரச்சினைகளும் இன்றி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

மர்ஹூம் முஸ்தபா சேரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

wpengine

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக்கோரி அமைச்சர் றிஷாட் கோரிக்கை

wpengine

கருணாவின் மனைவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதன் போது செருப்படியும்

wpengine