பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சில பகுதிகளில் உரிய முறையில் வாக்காளர் இடாப்பு திருத்தம் உரிய முறையில் இடம்பெறவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் மீண்டும் தேர்தலுக்கான நிதியை திறைசேரியிடமிருந்து கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

2025 வரவு செலவுத் திட்டம் மேலும் 2,200 பில்லியன் தேவை !

Maash

பிறைந்துறைச்சேனை மக்களால் அமீர் அலிக்கு ஆதரவு பிரச்சாரம்

wpengine

கொவிட் பரிசோதனை இனி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு

wpengine