பிரதான செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய நடைமுறை! பயணக்கட்டுப்பாடு தொடர்பில்

நாட்டில் எதிர்வரும் வாரத்தில், மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்னும் 2 வருடங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாதெனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

தந்தையின் இறுதி சடங்கு! பரீட்சைக்கு சென்ற சிறுமி! மனங்களை கனக்க வைக்கும் துயரம்

wpengine

கொழும்பு அகதியாவின் 34 வது வருடாந்த விழாவும் மாணவர்களுக்கான பரிசலிப்பு நிகழ்வும்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை, நாடாளுமன்றில் சலலப்பு!

Maash