பிரதான செய்திகள்

வாகனம் கொள்வனவு செய்ய அமைச்சர்களுக்கு தடை

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு வாடகை அடிப்படையிலான கட்டடங்கள் மற்றும் வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.


செலவுகளை குறைக்கும் வகையில் செயற்படுமாறு சகல அமைச்சர்களுக்கும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்படுகின்ற அரச நிறுவனங்களை முடிந்தளவு அரசாங்க கட்டடங்களுக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.


செலவுகளை குறைப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மகிந்தவின் குடும்பத்துடன் சங்கமித்த மின்னல் ரங்கா

wpengine

அரசியல் சாக்கடை, வியாபாரம் என்று கூறப்படுவதை மாற்றியமைத்தோம் அமைச்சர் றிஷாட்

wpengine

அங்கொட சந்தியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து . !

Maash