பிரதான செய்திகள்

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு நேற்றைய தினத்தை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை மதியம் 12.00 மணிவரை மூடுமாறு வர்த்தக சங்கம், வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால் வவுனியா நகரில் பெரும்பாலான கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12.00 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் நேற்று கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் 6.2மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்! புதிய முறை

wpengine

தழிழ் கைதிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் சிவசக்தி ஆனந்தன்

wpengine

கட்சி பேதங்களை மறந்து! அரசியல் பழிவாங்களில் ஈடுபட தற்போது நேரமில்லை

wpengine