பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமனம்

வவனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று  காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வந்த புதிய அரசாங்க அதிபரை முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகளால்  வரவேற்கப்பட்டார்.

வரவேற்பின் பின்னர் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல்,என்பன சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றன

புதிய அரசாங்க அதிபரிற்கு சமயத் தலைவர்களின் ஆசி வழங்கப்பட்டு, பதவியேற்பு இடம்பெற்றது.

 

புதிய அரசாங்க அதிபராக பதவியேற்ற பின் மாவட்ட செயலக அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டார் சோமரத்தின விதான பத்திரன

Related posts

உயிர்த்த ஞாயிறு காரணமானவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தவேண்டும்.

Maash

வடமாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்த அனுமதி! சிலாவத்துறை,நெடுங்கேணி மட்டும் மனிதவளம்,பௌதீக வள அபிவிருத்தியின் பின் தரமுயர்த்தப்படும் அமைச்சர் சத்தீயலிங்கம்

wpengine

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

wpengine