பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பொலிஸ் வளாகத்தில் 16பேருக்கு கொரோனா

வவுனியா பொலிஸ் வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தலைமையக பொலிஸில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளுக்கும் மற்றும் வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் இதற்கு முன்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்தது.

இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கு அமைய குறித்த புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா பயங்கரவாத விசாரணை பிிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு கடந்த 28 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் வவுனியா பொலிஸ் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்ததாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழ், சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை பரிசளிப்பு விழா-2016

wpengine

கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – ஹக்கீம் (விடியோ)

wpengine

மன்னாரில் 5 எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

wpengine