பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களின் அவலம்!

வவுனியா பொது வைத்தியசாலையில் உரிய நேரத்தில் சில வைத்தியர்கள் வராமையினால் மாதாந்த சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நோயாளர்கள்,

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக விடிகாலையே வந்த நிலையில் வைத்தியர்கள் வராமையினால் நீண்டநேரமாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்தியர்கள் வருகை தராமையினால், உணவருந்துவதற்கோ அல்லது வேறு தேவைகளிற்கோ வெளியில் செல்லமுடியாமல் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே நோயாளர்களாக உள்ள நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளால் மென்மேலும் அசௌகரியங்களையே சந்தித்து நிற்கின்றோம்.

எனவே மாவட்டத்தின் முக்கிய வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறான நிலமையை சீர்செய்வதில், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். 

Related posts

துாதுவரை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ஹக்கீம் (படங்கள்)

wpengine

கிண்ணியா டெங்கினைக் கட்டுப்படுத்த அரசு உடன் நடவடிக்கை அமைச்சர் றிஷாட் அமைச்சர் ராஜிதவுக்கு நேரில் விளக்கம்

wpengine

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது’

wpengine