பிரதான செய்திகள்

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு பலர் விசனம்

தபால் ஊழியர்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவதற்கு பிரதேச செயலங்களில் முதியோர்கள் அவதிப்படுவதைக் காணமுடிகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் 15வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவிப்பணம் மற்றும் நோயாளருக்கான கொடும்பனவு என்பவற்றை பெற வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதியோர்கள் மற்றும் நோயாளர்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பில் முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்து காலை 8 மணிக்கு பிரதேச செயலகம் வந்தேன்.

அதிக மக்கள் காரணமாக மதியம் 12 மணி ஆகியும் பணத்தை பெற முடியவில்லை. தபால் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் நாம் எமது தபால் நிலையத்தில் இலகுவாக பணத்தை பெற முடியும் என தெரிவித்தார்.

Related posts

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

wpengine

அடுத்த வாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

இலங்கை, இங்கிலாந்து மோதும் 4 ஆவது போட்டி இன்று

wpengine