பிரதான செய்திகள்

வவுனியாவில் பொதிமோசடி! 7 பொலிஸ் முறைப்பாடு

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பிரபல்யமான பொதிகள் அனுப்பும் நிலையத்திற்கு எதிராக 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து வெளிநாடுகளிலுள்ள உறவினருக்கு அனுப்பும் பொருட்கள் அங்கு சென்று சேரவில்லை என 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொதி அனுப்பும் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அனுப்பப்படும் பொருட்களுக்கு 17ஆயிரம் ரூபா செலவிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும் அப் பொருட்கள் உறவினர்களுக்குச் செல்லவில்லை. இது தொடர்பில் பொதி அனுப்பும் நிலையத்தில் கேட்டால் உங்களுடைய உறவினருக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சந்திரிக்காவில் பைத்தியதால்! ஸ்ரீலங்கா சுதந்திர பெரமுன கூட்டமைப்பு என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை

wpengine

பொலிகண்டி போராட்டம் மூலம் தமிழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை

wpengine

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம்!

Editor