பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு, மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.


வன்னி மாவட்ட அமைப்பாளரும், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினருமான உப்பாலி சமரசங்க தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது மக்கள் மத்தியில் சிறந்த சக்தியை கட்டியெழுப்பும் செயற்பாடுகள், இலங்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

கல்வி பணிப்பாளர் நியமனம்! ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆப்பு வைத்த இளஞ்செழியன்

wpengine

மன்னார் நகர இறைச்சி நிலையங்களுக்கான கேள்வி தொகை 16 லச்சம் மக்கள் விசனம்

wpengine

வேலைவாய்ப்பு! மன்னார் நகரப்பகுதியில் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் நீக்கம்! மஸ்தானின் திருவிளையாட்டு

wpengine