பிரதான செய்திகள்

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

வவுனியா – புளியங்குளம், பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதில், 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, கனகராயன் குளத்தை சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும், கணவன் மனைவிக்கு அருகே சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரணம் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்காக சடலங்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இமதுவ பிரதேச சபை தலைவர் A.V. சரத் குமார உயிரிழந்துள்ளார்.

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்! கோத்தா

wpengine

மன்னாரில் 2 தடுப்பூசிகள் ஏற்றியவர்கள் மாத்திரம் திங்கள் கிழமை நடமாட முடியும்.

wpengine