பிரதான செய்திகள்

வவுனியாவில் ஒன்றுகூடிய மஹிந்த

வவுனியாவில் நேற்று மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

 

வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள், இணைந்த வடக்குகிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற   பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்,

இக் கலந்துரையாடலின் போது நடைபெறவிருக்கும் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  கலந்துரையாடலில் கலந்த கொண்ட கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

துருக்கி எர்டோகனின் அதிரடி நடவடிக்கை

wpengine

மட்டக்களப்பில் கிராமசேவகர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டம்!

Editor

அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்களை மறந்து பயணிக்கமுடியாது.

wpengine