பிரதான செய்திகள்

வட மாகாண பொலிஸ் விளையாட்டு போட்டி வவுனியாவில்

வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழா எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் இவ் விளையாட்டுப் போட்டியில் வட மாகாணத்தில் உள்ள 6 பொலிஸ் டிவிசனை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இப்போட்டிகள் பொலிஸ் மா அதிபரின் வழிநடத்தலில் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

17 ஆம் திகதி மற்றும் 19 ஆம் திகதியில் இடம்பெறவுள்ள இவ் விளையாட்டு விழா வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வட மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிலையில் 19 ஆம் திகதி 6 பொலிஸ் டிவிசனைச்சேர்ந்த பொலிஸாரின் அணிவகுப்பும் நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அமைச்சர்களான கிரியெல்ல, றிசாத்

wpengine

கல் வீச்சு காட்டு மிராண்டித்தனமானது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கண்டனம்!

wpengine

மேக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

wpengine