பிரதான செய்திகள்

வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான கூட்டம் யாழ்

வடமாகாண முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளிற்கான வகாபி சட்டம் தொடர்பான கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கருத்தரங்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த கருத்தரங்கு வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும்.
பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக வளங்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்
அஷ்ஷெய்க்.எம்.எச்.நூருல்அமீன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

மேலும், இக்கருத்தமர்வில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ். பள்ளிவாசல்
நிர்வாகிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

நாம் கோரும் தீர்வுகள் அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாக இருக்க வேண்டும் என்கிறார் இரா.சாணக்கியன் MP

Editor

மஞ்சள் காவி உடை அணிந்தவர்கள் மீது கை வைத்து கேவலப்படுத்தி வருகின்றார்கள்

wpengine

மன்னார் ,தாழ்வுபாட்டு கிராமத்தில் கைக்குண்டு மீட்பு

wpengine