பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகும் உருவாக்கப்பட வேண்டும் -ஹசன் அலி

அரசியல் தீர்வு விடயத்தில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது, பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற்கு ஒப்பானது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான தனி பிராந்தியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்வுத்திட்டம் ஒன்று வடமாகாண சபையில் கடந்த தினம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது குறித்த முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக அதன் பொது செயலாளர் ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, இந்த விடயத்தை கூறினார்.
அதேநேரம் வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகும் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பிலும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி கருத்து வெளியிட்டிருந்தார்.

 

Related posts

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

wpengine

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரி பரிசோதனை அறிக்கை இன்று!

Editor

இலஞ்சம் பெற்ற 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலன்னறுவையில் கைது!

Editor