பிரதான செய்திகள்

வடக்கில் போலி சான்றிதழ்! 2 அதிபர்கள் 18 ஆசிரியர்கள் நீக்கம்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமனம் பெற்று ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டனர். சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல் நடைமுறை இடம்பெறும். இதற்காக அவர்களின் சான்றிதழ் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அனுப்பப்படும்போதே 20 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் சேர்ப்பித்தமை கண்டறியப்பட்டது. இதில் இருவர் அதிபராகவும் தேர்வாகியிருந்தனர், 20 பேரில் ஆசிரியைகளும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போலிச் சான்றிதழ் என்று இனங்காணப்பட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர்கள் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அரச கொடுப்பனவுகள் அனைத்தும் மீளச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அவ்வாறு குறித்த கொடுப்பனவுகளை மீழ் செலுத்த மறுப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் இ. இரவீந்திரன் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

GCE O/L பரீட்சையை நிறுத்தி உயர்தரம் கற்கும் வாய்ப்பை வழங்குங்கள்!-பாராளுமன்றில் டலஸ்-

Editor

மன்னாரில் புத்தக கடையில் தீ! பிரதமரின் உறுதி மொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை

wpengine

மீண்டும் நட்டத்தை பதிவு செய்த மின்சார சபை..!

Maash