பிரதான செய்திகள்

வசீம் தாஜூடின் கொலை! ஷிராந்தி,யோசித விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு, நாளை புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

தாஜூடின் கொலை தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக தம்மையும் மகன் யோசிதவையும் புலனாய்வுப் பிரிவினர் நாளை அழைத்துள்ளனர் என சிராந்தி ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையில் சந்தேகத்துக்கு இடமாக இளைஞன்

wpengine

அன்று முஸ்லிம்களுக்கு எதிராக,, இன்று தமிழர்களுக்கு எதிராக

wpengine

சகோதரியின் பெயரில் பள்ளிவாசல் கட்டிகொடுத்த அமைச்சர் றிசாட்

wpengine