பிரதான செய்திகள்

வசீம் தாஜுதீனின் கொலை! பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மீண்டும் விளக்கமறியல்

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கொலை தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸின் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு விசாரணையின்போதே, நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

கல்முனையை சேர்ந்தவரை முன்னிறுத்தி கிழக்கில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அமைய வேண்டும்

wpengine

முல்லைத்தீவு,மன்னார்,வவுனியா மாவட்ட வாழ்வாதாரத்திற்கு கைத்தொழில் அமைச்சு நிதி ஒதுக்கீடு

wpengine

ஆப்கானிஸ்தானியர்களே !! உங்களை உளமாற வாழ்த்துகிறேன்.

wpengine