பிரதான செய்திகள்

றிஷாட்டை அநியாயமான முறையில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்தார்கள்

அநியாயமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிசாட் பதியூதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமை உண்மைக்கும், சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.


முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கடந்த செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் அமீர் அலி விடுத்துள்ள செய்தியில்,
மக்களுக்காகவும் மக்களின் உரிமைக்கும் போராடிய, சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் குரலாக நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் ஓங்கி ஒலித்த ரிசாட் பதியூதீனை அநியாயமான முறையில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து அடைத்தமை மனுநீதிக்கு முரணான செயலாகும்.

Related posts

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கூட்டமைப்பு, மஸ்தான் எம்.பி மீண்டும் அடம்பிடிப்பு: ஆதரிக்க முடியாதென அமைச்சர் றிசாத்

wpengine

நல்லாட்சியில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம்.

wpengine

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Editor