பிரதான செய்திகள்

றிசாட் பதியுதீன் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கொய்யாவாடி மக்கள்

(எஸ்.எம்.எம். வாஜித்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் முலம் கொய்யாவாடி கிராமத்தின் பிரதான வீதி  810 மீட்டர் “காபட்” வீதியாக மாற்றபட்டுள்ளது.

கடந்த காலத்தில் இவ் வீதி கேரவல் பாதையாக குன்றும்,குழியுமாக  காணப்பட்டது என்பது குறிப்பிடக்கது.இதனால் மழை காலத்திலும்,ஏனைய நாட்களிலும்  பாடசாலை மாணவர்கள்,போக்குவரத்து பாதசாரிகள் பல்வேறுபட்ட சிறமங்களை எதிர் நோக்கியதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு இவ் வீதியினை காபட் பாதையாக மாற்ற நிதி ஒதுக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பள்ளி நிர்வாகம்,ஆதரவாளர் மற்றும் நலன் விரும்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றனர்.

Related posts

புத்தாண்டு கொண்டாட்டம் மஹிந்த தொடர்பில் சர்ச்சை

wpengine

வில்பத்து போராட்டத்தை மலினப்படுத்த முயற்சி

wpengine

தரமற்ற உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? பாராளுமன்றில் சஜித் கேள்வி!

Editor