பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்கள்,இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் ஹிஸ்புல்லாஹ் பேச்சுவார்த்தை

சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை ஜித்தாவை சென்றடைந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை, சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் அப்துல் அஸீஸின் செயலாளர் உள்ளிட்ட உயர் குழுவினரால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஜயத்தின் போது சவூதி அரேபியாவின் அரச உயர் அதிகாரிகளையும், சர்வதேச இஸ்லாமிய நிறுவனத்தினுடைய செயலாளர் நாயகம், சவூதி இளவரசர் பஹத் பின் அப்துல் அஸீஸ் உள்ளிட்ட பல்வேறு அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது, சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்  தொடர்பாகவும், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் என்பதை எனது பார்வையில், ஒரு புனிதப் பணியாகவே கருதுகின்றேன் அமைச்சர் றிஷாட்

wpengine

கழிவுகளை கொட்டுவதல்! உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

wpengine

அரசியலமைப்பை மாற்றியமைக்க சந்தர்ப்பமளிக்க மாட்டோம்!மெகொட அபேதிஸ்ஸ தேரர்

wpengine