செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையர்களில் 59 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி வரை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(07.02.2025) அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா பிரதி உயர்ஸ்தானிகர் கோரிக்கை!

Editor

முதன் முறையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம்!

wpengine

அஷ்ரப் மரணித்து 18வருடங்கள் அவரது நோக்கத்தை அடைந்திருக்கின்றோமா?

wpengine