பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி இரகசிய சந்திப்பு! தகவல் வெளியாகவில்லை

அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த சந்திப்பு மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும், சமகால அரசியல் நிலை குறித்து பேசப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதன்போது மிகவும் முக்கியமான கதாப்பாத்திரமான சபாநாயகர் கரு ஜெயசூரியவும் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பு மூடிய அறைக்குள் நடைபெற்ற போதும், அங்கு பேசப்பட்ட விடயங்கள் இரகசியமாக பேணப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியமையை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் பிரதமராக மீண்டும் ரணில் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மைத்திரி – ரணிலுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு காணரமாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம்! சம்மாந்துறையில் தலைவர் ரிஷாட்

wpengine

வியட்நாமில் கூட்டுறவு துறையாளர்களின் வர்த்தக சந்தை அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine

குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடிதம்

wpengine