பிரதான செய்திகள்

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு இல்லை-அமைச்சர் ரோஹித்த

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எவ்வித தயார் நிலையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை வகிக்க தகுதியான நபர் தற்போது அந்த பதவியை வகித்து வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு கொண்ட எவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இல்லை என நினைப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அதன் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளதாகவும் அண்மைய காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Related posts

கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை தலைவரின் கைது!

wpengine

இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “26 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில்” ஜனாதிபதி.

Maash

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்க முடிவு .

Maash