செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் 2642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படை, மற்றும் பொலிசாரிடம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(31) மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையில் நடைபெற்ற போது , மீள் குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பிலான விடயம் கலந்துரையாடப்பட்ட போதே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1775.27 ஏக்கர் காணி இராணுவத்தினரிடமும் , 160.67 ஏக்கர் காணி , கடற்படையினரிடமும் , 660.05 ஏக்கர் காணி விமான படையினரிடமும் , 28.28 ஏக்கர் காணி பொலிஸ் திணைக்களத்திடமும் காணப்படுகின்றன.

அதன்படி யாழ் . மாவட்டத்தில் 2ஆயிரத்து 642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படையினர் மற்றும் பொலிசாரின் வசம் உள்ளன என தெரிவிக்கப்பட்டது

Related posts

செப்டெம்பர் 15ம் திகதிக்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Editor

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது சில குழுக்கள் தாக்குதல்

wpengine

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor