பிரதான செய்திகள்

யாப்பா,கபீர் ஹாசிம் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரி,அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா,கபீர் ஹாசிம்  ஆகியோரின் வாகனங்களை மறித்து அரநாயக்க பகுதியில் வைத்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த அமைச்சர்கள்,அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போதே அரநாயக்க மண்சரிவால் பாதிக்கப்பட்ட நபர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்பட்டதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது.

Related posts

கடல் மாசாக்கம், எண்ணைய் கசிவு திட்டம் தொடர்பாக கருத்தரங்கில் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் பங்கேற்பு

wpengine

வடக்கு,கிழக்கில் எங்கு மலைகளைக்கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலை

wpengine

ஜனநாயக ரீதியான போராட்டத்தை முடக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சுமந்திரன் MP காட்டம்!

Editor