பிரதான செய்திகள்

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

கொழும்பில் இந்த வாரம் பல இலட்சம் பேரைக் குவித்து, மாபெரும் பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மறுத்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கே ஐ.தே.க. இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனாதிபதியின் வதிவிடம், செயலகம் என்பனவற்றை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும்போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகத் தெரிவு செய்யும் தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

Related posts

அநீதிக்கு எதிராக களமிறங்குபவர்களை விமர்சிக்கலாமா ? எமது முன்னோர்கள் செய்த தியாகத்தின் விளைவு ?

wpengine

கண்டி ஜும்ஆப் பள்ளிவாசல் பணிகளை நிறுத்த வேண்டும் -ஆணையாளர் கடிதம்

wpengine

காத்தான்குடி பிரதான வீதியில் விபத்துக்களை குறைப்பதற்கு பூச்சாடிகளை அகற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுமதி

wpengine