பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவோம்! துமிந்த திஸாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீளவும் ஜனாதிபதியாக்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாணந்துறைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

2021ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.இதன் மூலம் மீளவும் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக கடமையாற்றுவார்.

2021ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது.அதற்கான தகுதி கிடையாது.

எனவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தாம் ஒரு தடவைதான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட் முசலி பிரதேசத்திற்கு செய்த சில சேவைகள்

wpengine

மக்களின் நலன் கொண்டதாகவே அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

“ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” – ரிஷாட் எம்.பி வலியுறுத்து!

wpengine