அரசியல்செய்திகள்

மேர்வினை தொடர்ந்து பிரசன்ன மற்றும் சரத்! தலைமறைவாக இருப்பதாக தகவல் .

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (05) இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கடைகள் கட்டப்பட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பானது இது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் இன்று (06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவும், அப்போது களனி பிரதேச சபையின் தலைவராகவும் இருந்தவர் என்றும், மேர்வின் சில்வாவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சிங்கப்பூர் சரத் ஆகியோரும் கைது செய்யப்பட உள்ளதாகவும், அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Related posts

வவுனியாவில் இதுவரை 4 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது .

Maash

படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ள பிரபல இந்திய நடிகர் மோகன்லால்!

Maash

“மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள்” மாவை மகனிடம் விசாரணை. !

Maash